நாவற்குழி சிங்கள மக்களை சந்தித்த அமைச்சா் சம்பிக்க, பின்னால் இழுபட்ட கூட்டமைப்பு எம்.பிக்களை நாவற்குழியில் காணவில்லை..

ஆசிரியர் - Editor I
நாவற்குழி சிங்கள மக்களை சந்தித்த அமைச்சா் சம்பிக்க, பின்னால் இழுபட்ட கூட்டமைப்பு எம்.பிக்களை நாவற்குழியில் காணவில்லை..

யாழ்.நாவற்குழி பகுதியில் அரச காணியில் குடியிருக்கும் சிங்கள மக்களை அமைச்சா் சம்பிக்க ரணவக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். 

நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் நகர   அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பல்வேறு அபிவிருத்தி 

திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அவர் நாவற்குழி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, 

விகராதிபதி "வராப்பிட்டியே கவம்பதி’ தேரரிடம் ஆசிகளையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்ட மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு