விற்பனைக்கு தயாா் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தொகுதி கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I
விற்பனைக்கு தயாா் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தொகுதி கஞ்சா மீட்பு..

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த நிலை யில் ஒரு தொகுதி கஞ்சா விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டுள்ளது. 

விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று குறித்த பொ தி மீட்கப்பட்டுள்ளது.

அதில் 4.125 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், கைப்பற்றப்பட்ட பொதி யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு