தனயன் இறந்த சோகத்தில் தன் உயிரையும் மாய்த்த தாய்..

ஆசிரியர் - Editor I
தனயன் இறந்த சோகத்தில் தன் உயிரையும் மாய்த்த தாய்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகன் உயிாிழந்த சோகம் தாங்க முடியாமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 

மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான 

யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 

அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் சடலம் நேற்று அதிகாலை 2 மணிக்கு சிராட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு 

கொண்டு வரப்பட்டுள்ளது. மகனது பிரிவை தாங்க முடியாத தாயார் நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் 

உள்ள வனப்பகுதியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே ஒரு மகனை பறிகொடுத்த தாய் தனது இரண்டாவது பிள்ளையையும்

 பறிகொடுத்த தாக்கத்தை தாங்க முடியாத யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஒரே வீட்டில் இரு மரணங்கள் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு