ஏழை மக்களுக்காக 40 வீடுகளை கட்டும், தனி மனிதன்..

ஆசிரியர் - Editor I
ஏழை மக்களுக்காக 40 வீடுகளை கட்டும், தனி மனிதன்..

யாழ்.கோப்பாயில் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் வாமதேவன் அவர்களால் ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் அமைதியான ஆரம்ப நிகழ்வில் புதிய வீட்டுக்கான அடிக்கல்லை கடந்த வெள்ளிக்கிழமை (15) நாட்டி வைத்தார்.

கோப்பாயில் முதற்கட்டமாக 40 வீடுகளை அமைத்து வீடில்லாதோருக்கு வழங்கவுள்ளார். தனது சொந்தப் பணத்தில் மக்களுக்கு இந்த உதவிகள் மட்டுமல்ல பல உதவிகளையும் செய்து வருபவர் தியாகேந்திரன் வாமதேவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வை பிரமுகர்களை அழைத்து பெரிய நிகழ்வாக செய்ய வேண்டிய இந்த நிகழ்வை நாலு பேருடன் செய்திருப்பது அவரின் பெருந் தன்மையை காட்டுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு