அதிகாலையில் பாாிய விபத்து 4 போ் சம்பவ இடத்தில் பலி, மேலும் பலா் ஆபத்தான நிலையில், அதிகாலையில் சோகம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் பாாிய விபத்து 4 போ் சம்பவ இடத்தில் பலி, மேலும் பலா் ஆபத்தான நிலையில், அதிகாலையில் சோகம்..

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி ஒன்றில் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தின் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக 

பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பேருந்தில் சிக்கியுளளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு