போருக்கு பின்னர் உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
போருக்கு பின்னர் உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..

வடக்கில் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து உள்ளதாக ஜெப்பூர் நிறுவன வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

எமது நிறுவனத்தில் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயன்பெற்று உள்ளனர். அவர்களுக்கு எமது நிறுவனத்தின் ஊடாக செயற்கை அவயங்கள் பொருத்தி உள்ளோம். 

யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் விபத்துக்கள் மூலம் அதிகளவானவர்கள் அவயங்களை இழந்த நிலையில் செயற்கை அவயங்களை எமது நிறுவனத்தின் ஊடாக பொருத்தியுள்ளனர். 

அதேவேளை நீரழிவு நோய் , முடக்கு வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவயங்களை இழந்தவர்கள் . அவயங்களின் செயற்பாட்டை இழந்தவர்கள் பயன்பெற்று உள்ளனர். 

அத்துடன் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் குழந்தைகள் பிறப்பிலையே அவயங்களை இழந்த நிலையிலும் , அவயங்கள் செயற்பாடாத நிலையிலும் பிறக்கின்றனர். 

அதற்கான காரணங்கள் இதுவரை ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட வில்லை. ஆனால் தாய்மார்கள் யுத்ததிற்கு முகம் கொடுத்தமையால் , ஏற்பட்ட பாதிப்புக்களாக இருக்காலம் எனும் சந்தேகம் உள்ளது என தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு