வீதியால் நடந்து சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு..

ஆசிரியர் - Editor I
வீதியால் நடந்து சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு..

யாழ்.அரியாலைப் பகுதியில் வீதியில் நடந்து வந்த பெண்ணிடம் இருந்து தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றனர்.

இன்று (01) பிற்பகல் 2 மணியளவில் அரியாலை ஆனந்தன்வடலி வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நாயன்மார்க்கட்டுப் பகுதியைச் சேர்ந்த சாந்தி தெய்வேந்திரன் (வயது -60) என்ற பெண்ணின் தங்கச் சங்கிலியையே அறுத்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த பெண் அரியாலை தபால்கட்டையில் இருந்து ஆனந்தன்வீதியால் நடந்து வந்துகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் சங்கிலியை அறுக்க முற்பட்ட போது அவர்களுடன் அடிபட்டுள்ளார்.

 ஆனாலும் அரைவாசி சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் பெண்ணின் கழுத்துப் பகுதி காயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு