ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சன்நிதி முருகன் ஆலயத்தில் ரத திருவிழா..(photos)

ஆசிரியர் - Editor I
ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சன்நிதி முருகன் ஆலயத்தில் ரத திருவிழா..(photos)

வரலாற்றுப் புகழ்மிக்க செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று(25) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

அதிகாலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் முருகப் பெருமான் அழகிய திருத்தேர் ஏறி அடியவர்களுக்கு காட்சியளித்தார்.

தொண்டமனாறு – செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் மஹோற்சவ விழா கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி 14 தினங்கள் தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினி பஸ் வண்டிகளின் சேவையுடன் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு