பொன்னாலை - தொண்டமனாறு வீதி இரவு 11 மணிவரை திறக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
பொன்னாலை - தொண்டமனாறு வீதி இரவு 11 மணிவரை திறக்கப்படும்..

செல்வச்சந்நிதி ஆலயத்தின் உற்சவத்தினை முன்னிட்டு பொன்னாலை தொண்டமணாறுப் பாதையினை இரவு 11 மணிவரையில் திறக்குமாறு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

செல்வச் சந்திதி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மயிலிட்டி ஊடான குறித்த பாதையினை உற்சவ காலம் முடிவுறும் வரையில் இரவு 11 மணி வரைக்கும் போக்குவரத்திற்கு அனுமதி பெற்றுத்தருமாறு எம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் பிரகரம் குறித்த விடயத்தினை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மேற்படி அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஆலய உற்சவ காலம் நிறைவு பெறும் காலம் வரையில் வழமைபோன்று மாலை 7 மணிக்கு வீதி மூடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வீதி எதிர்வரும் 28ம் திகதி வரையில் இரவு 11 மணிக்குப் பின்பே முடப்படும். என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு