விலக்கு பிடிக்கபோன வயோதிபரை அடித்து கொலை செய்த கும்பல்..

ஆசிரியர் - Editor I
விலக்கு பிடிக்கபோன வயோதிபரை அடித்து கொலை செய்த கும்பல்..

யாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினரு க்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது விலக்கு பிடிக்க சென்ற 54வயதான நடராஜா தேவராஜா என்ற வயோதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு வாகனத்தின் மின் விளக்குகளை அணைக்காமல் சென்றதனால் இரு தரப்புக்கிடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து முறுகல் நிலை மோதலா கியுள்ளது. இந்த மோதலை அவதானித்துக் கொண்டிருந்த 54 வயதான நா.தேவராஜா என்பவர் விலக்கு பிடிக்க சென்றுள்ளார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட குறித்த வயோதிபர் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை மோதலில் ஈடுபட்டவர்களில் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு