யாழ்.நெல்லியடியில் பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்றவர் நகை கடை உரிமையாளராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்றவர் நகை கடை உரிமையாளராம்..

நெல்லியடியில் வீதியால் பயணித்த பெண்ணிடம்  அண்மையில்  இடம்பெற்ற சங்கிலி அறுப்பில் ஈடுபட்டவர் ஓர் நகை கடை உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்புல்  மேலும் விபரம் தெரிவிக்கையில் 

நெல்லியடியில் வீதியில் இடம்பெற்ற குறித்த சங்கிலி அறுப்புத் தொடர்பில் நாம் தீவிர விசாரணையில் ஈடுபட்டோம். அதன்போது எமக்கு உதவியாக ஓர் சீ.சீ.ரி கமராவின் பதிவு கிடைத்தது. 

அதன்  உதவியுடன் ஒருவரை நாம்  கைது செய்தோம். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்  ஓர் நகை கடை உரிமையாளர். எனக் கண்டறியப்பட்டுள்ளது. என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு