யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் ஈ.பி.டி.பி. உறுப்­பி­ன­ரான ஜெகன் மீதான தடை நீடிப்பு!

ஆசிரியர் - Admin
யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் ஈ.பி.டி.பி. உறுப்­பி­ன­ரான ஜெகன் மீதான தடை நீடிப்பு!

யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் ஈ.பி.டி.பி. உறுப்­பி­ன­ரான வே.குகேந்தி­ரன் (ஜெகன்), மாந­கர சபை அமர்­வு­க­ளில் பங்­கேற்­ப­தற்கு விதிக்­கப்­பட் டுள்ள இடைக்­கா­லத் தடை நேற்று மீண்­டும் நீடிக்­கப்­பட்­டது. எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் மாதம் 5ஆம் திகதி இந்த வழக்கு மீதான விசா­ரணை மீண்­டும் நடை­பெ­ற­வுள்­ளது.

குகேந்­தி­ரன் இரட்­டைக்­கு­டி­யு­ரி­மை­யுள்­ள­வர் என்­ப­தால், அவர் உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க முடி­யாது, அவ­ரது மாந­கர சபை உறுப்­பு­ரி­மையை செல்­லு­ப­டி­யற்­றது என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரி கடந்த ஜூலை மாதம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. ஜூலை 11ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

இதன்போது, மாந­க­ர­சபை அமர்­வு­க­ளில் பங்­கேற்­ப­தற்­கும், வாக்­க­ளிப்­ப­தற்­கும் குகேந்­தி­ர­னுக்கு இடைக்­கா­லத் தடை­வி­தித்து மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தின் தலை­வர் பத்­மன் சூர­சேன, நீதி­ய­ர­சர் அர்­ஜூன ஒப­ய­சே­கர முன்­னி­லை­யில் இந்த வழக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்று மீண்­டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. முறைப்­பாட்­டா­ளர் சார்­பில் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ரன், நிரான் அங்­கிட்­டல், செல்வி ஜே.அரு­ளா­னந்­தம் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர். குகேந்­தி­ரன் சார்­பில் சட்­டத்­த­ரணி அப்­துல் நஜீப் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­தார்.

ஈ.பி.டி.பியின் செய­ல­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்­தா­வும் மன்­றுக்கு வந்­தி­ருந்­தார்.இலங்­கை­யும் கன­டா­வும் பொது­ந­ல­வாய நாடு­கள். குகேந்­தி­ரன் இந்த இரு நாடு­க­ளி­னது குடி­யு­ரி­மை­க­ளையே வைத்­துள்­ளார். 

1953ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­ட­ஏற்­பாட்­டில் பொது­ந­ல­வா­யத்­தைச் சேர்ந்த எந்­த­வொரு நாட்­டுக் குடி­யு­ரி­மையை வைத்­தி­ருந்­தா­லும் அது வேறொரு நாட்­டுக்கு விசு­வா­ச­மா­ன­வ­ராக கருத முடி­யாது. வேறு நாட்­டுக்கு விசு­வா­ச­மாக இருந்­தார் என்ற அடிப்­ப­டை­யில் குகேந்­தி­ர­னின் உறுப்­பு­ரி­மையை நீக்க முடி­யாது என்று, அவர் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி வாதத்தை முன்­வைத்­தார்.

1972ஆம் ஆண்டு இலங்கை குடி­ய­ர­சா­கும்­போது, பொது­ந­ல­வா­யத்­தைச் சேர்ந்த நாடு­க­ளும், வேறு நாடு­கள் என்ற வரை­ய­றைக்­குள் வந்­துள்­ளது. எனவே 1953ஆம் ஆண்டு சட்­டம், தற்­போது ஏற்­பு­டை­ய­தா­காது என்று முறைப்­பாட்­டா­ளர் சார்பு சட்­டத்­த­ர­ணி­க­ளால் குறிப்­பி­டப்­பட்­டது.

இரு தரப்பு வாதங்­க­ளை­யும் ஆராய்ந்த நீதி­ய­ர­சர்­கள், ஏற்­க­னவே வழங்­கிய இடைக்­கா­லக் கட்­ட­ளையை நீடித்து உத்­த­ர­விட்­டார்­கள். வழக்கை ஒக்­ரோ­பர் 5ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தார்­கள். அன்­றைய தினம் இந்த வழக்கு மீதான வாதம் நடை­பெ­றும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு