அராலியில் கிறீஸ் பூதம் அட்டகாசம் நள்ளிரவில் வேலி தீயில் நாசம்.

ஆசிரியர் - Editor I
அராலியில் கிறீஸ் பூதம் அட்டகாசம் நள்ளிரவில் வேலி தீயில் நாசம்.

அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று (02.08.2018) வியாழக்கிழமை நள்ளிரவு விசமிகள் தீமூட்டி நாசமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே விசமிகள் தீமூட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக அராலிப் பிரதேசம் முழுவதும் கிறீஸ் பூதங்களின் அட்டகாசம் அரங்கேறி வருகின்றது. 

இந்தப் பூதங்கள் இரவு வேளைகளில் வீடுகளுக்குக் கற்களால் எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீயிட்டதுடன், அயலிலுள்ள அவரது தம்பியின் வீட்டு யன்னல்களைத் தட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

இந்தக் கைங்கரியத்தைச் செய்தது கிறீஸ் பூதமா அல்லது விசமிகளா என்று அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

இதேவேளை, அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தைக் கலக்கமடையச் செய்துவரும் கிறீஸ் பூதங்களின் அட்டகாசம்தான் இது என்று அயலவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவத்தால் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு