சீனிக்குள் யூரியா கலந்தமை கண்டுபிடிப்பு பாவிக்க வேண்டாம் என எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
சீனிக்குள் யூரியா கலந்தமை கண்டுபிடிப்பு பாவிக்க வேண்டாம் என எச்சரிக்கை..

வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப் பட்ட சீனியில் யூரியா கலந்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சதோச விற்பனை நிலையத்தில் விற்க்கப் பட்ட சீனியை பாவிக்க வேண்டாம் என பொலிஸார் கேட்டுள்ளனர்.

குறித்த விற்பனை நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையில் சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமேனவும் உடனடியாக திருப்பி வழங்குமாறு வவுனியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

வவுனியா சதோச விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட தேவைக்காக யூரியா வினை கொள்வனவு செய்து சதோச விற்பனை நிலையத்தில் வைத்துள்ளார். அதனை அங்கு பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் சீனி என நினைத்து விற்பனை செய்துள்ளார். 

இதன் அடிப்படையில் இன்று (02.08.2018) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் சீனி கொள்வனவு செய்த பொதுமக்களை அவற்றை உபயோகிக்க வேண்டாமேனவும் அவற்றை உடனடியாக மீள வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ,மற்றும் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு