வாள்வெட்டில் காயமடைந்தவர்களுக்கு வைத்தியசாலைக்குள் வைத்தும் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டில் காயமடைந்தவர்களுக்கு வைத்தியசாலைக்குள் வைத்தும் தாக்குதல்..

யாழ்.வரணி பகுதியில் நேற்றய தினம் இட ம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டவர்கள் மீதும் அவர்களை பார்க்க சென்றவர்கள் மீதும் வைத்தியசாலைக்குள் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வரணி பகுதியில் மரணி சடங்கு ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது. இதில் 5பேர் காயமடைந்து பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் னர்.

இவர்கள் மீதும் இவர்களை வைத்தியசா லையில் பார்க்கச் சென்றவர்கள் மீதும் இன்று மாலை வைத்தியசாலைக்குள் வைத்தே ஒரு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. தாக்குதல் இடம்பெற்றபோது வைத்திசாலைக்குள் மக்கள் மற்றும் வைத்தியர்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளன தரப் பின் நியாயங்களை கேட்க தயாரில்லாத பொலிஸார் தாக்குதல் நடாத்தியவர்களு க்கு ஆதரவாக இருப்பதாக குற்றஞ்சாட்டும் தாக்குதலுக்குள்ளான தரப்பு

நாளை இது விடயமாக மக்களை அழைத்துக் கொண்டு வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு