யாழில். கடந்த ஆண்டு 14 இந்திய குழந்தைகள் பிறந்துள்ளன

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 14 இந்தியத் தமிழ் குழந்தைகள் பிறந்துள்ளன என்று வடக்குப் பிரதிப் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 484 இலங்கைத் தமிழ் குழந்தைகளும், 5 சிங்களக் குழந்தைகளும், 14 இந்தியத் தமிழ்க் குழந்தைகளும், 17 இஸ்ஸாமியக் குழந்தைகளும் பிறந்துள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாகக் கோரப்பட்டமைக்கு அமைய வடக்குப் பிரதிப் பதிவாளர் நாயகம் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளார்.