SuperTopAds

இர­ணை­ம­டுச் சந்­தி­யில் உள்ள விவ­சாய ஆராய்ச்சி நிலையத்தை ஆக்கிரமித்துள்ள படையினர்!

ஆசிரியர் - Editor II
இர­ணை­ம­டுச் சந்­தி­யில் உள்ள விவ­சாய ஆராய்ச்சி நிலையத்தை ஆக்கிரமித்துள்ள படையினர்!

கிளி­நொச்சி நக­ரத் திட்­ட­மி­ட­லுக்­காக விவ­சாயத் தேவை தொடர்­பில் கவ­னம் செலுத்­தும் நிலை­யில் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள விதை உற்­பத்­திப் பண்­ணைக்­கான 416 ஏக்­கர் காணி­யில் இன்று 50 ஏக்­கர் நிலமே உரிய திணைக்­க­ளத்­தி­ட­முள்­ளது என இர­ணை­மடு விவ­சாய சம்­மே­ள­னச் செய­லா­ளர் மு.சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் 2030ஆம் ஆண்­டின் நக­ரத் திட்­ட­மி­டல் தொடர்­பான முத­லா­வது பங்­கு­தா­ரர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் கடந்த வியாழக்கிழமை நகரத் திட்­ட­மி­டல் அதி­கார சபை­யின் வடக்கு மாகா­ணப் பணிப்­பா­ளர் வை.ஏ.ஜி.கே. குண­தி­லக தலைமை­யில் கிளிநொச்சி நண்­பர்­கள் விடு­தி­யில் இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­படி கருத்தைத் தெரி­வித்­தார்.செய­லர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கிளி­நொச்சி நக­ரத் திட்­ட­மி­ட­லுக்காக 33 கிராம அலுவலர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பகுதி தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளது. அந்­தக் கிராம அலுவலர் பிரி­வுக்குள் அலு­வ­ல­கம், நிர்­வா­கம், விவ­சா­யம், கைத்­தொ­ழில், கல்வி, போன்­ற­வற்­றில் கவ­னம் செலுத்­தப்­ப­டு­கின்­றமை வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய ஒரு விட­யம்.

ஆனா­லும் இதற்­காகத் தேர்வு செய்­யப்­பட்ட பகு­தி­க­ளுக்­குள் மட்­டும் விவ­சா­யி­க­ளின் முக்­கிய மூன்று மையங்­கள் இன்­று­வரை படை­யி­ன­ரின் பிடி­யில் உள்­ளன. அவற்­றில் படை­யி­னர் சாதா­ரணமாக விவ­சா­யம் செய்­கின்­ற­னர். இத­னால் வரு­டா­வ­ரு­டம் விவ­சா­யி­கள் தமக்­கான விதை­நெல்­லைப் பெற­மு­டி­யாது தென்­னி­லங்­கையை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­றார்­கள்.
இந்தப் பண்­ணை­யின் முழு நிலத்­தி­னை­யும் உரிய திணைக்­க­ளத்­தி­டம் கைய­ளித்­தால் அங்கே 400 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்­ப­டும். அத்­தோடு இந்த நிலத்­தில் பெறப்­ப­டும் விதை நெல்­லா­னது எமது மாவட்­டத்­துக்கு மட்­டு­ மன்றி எமது மாகா­ணத்­துக்கே போது­மா­ன­தாக அமை­யும்.

அதே­போன்று இர­ணை­ம­டுச் சந்­தி­யில் உள்ள விவ­சாய ஆராய்ச்சி நிலை­யத்­துக்­கான இடத்­தில் படை­யி­னர் முகாம் அமைத்­துள்­ள­னர். இந்த நிலை­யில் அபி­வி­ருத்­தியை எட்­ட­மு­டி­யுமா என்­ப­தும் கேள்­விக்­கு­ரி­யதே. எனவே குறித்த விட­யங்­கள் தொடர்­பில் படை­யி­னர் கவ­ னம் செலுத்த வேண்­டும் என்றார்.