# பாராளுமன்ற உறுப்பினருக்கு கல்முனை மக்களின் கௌரவிப்புடன் பாராட்டு விழா
# பாராளுமன்ற உறுப்பினருக்கு கல்முனை மக்களின் கௌரவிப்புடன் பாராட்டு விழா
கல்முனை மக்களினால் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய ஏ.ஆதம்பாவாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(31) இரவு கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர், அனைத்து பள்ளி தலைவர்கள், கல்முனை வர்த்தக சங்க உறுப்பினர்கள், மார்க்கெட் சங்க உறுப்பினர்கள், உலமாக்கள் புத்திஜீவிகள், உலமாக்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.