SuperTopAds

யாழில் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்த்த இளைஞன்.!

ஆசிரியர் - Admin
யாழில் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்த்த இளைஞன்.!

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார்.

காணாமல் போன இளைஞனை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

33 வயதான குறித்த இளைஞன் பல்துறைகளிலும் திறமையான விளையாட்டு வீரர் என தெரிக்கப்படுகின்றது .

சடலமானது உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞனின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.