ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்!

ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று காலை காலமானார்.
இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். யோகேந்திரநாதன் எழுதிய “34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு” நாவல் அண்மையில் வெளியாகி மிகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.