பணமோசடியில் ஈடுபட்ட இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது!

பணமோசடியில் ஈடுபட்ட இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கியில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 15 இலட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக இருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.