யாழ்.பொம்மைவெளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.