யாழ்.இளவாலையில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த மோஷஸ் பாக்கியநாதன் (76) என்ற நபரும் அவரது மகனும் வீதியோரத்தில் இருந்தவேளை பேருந்து மோதியதில் படுகாயமடைந்த்நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்தார்.மகன் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார்
நேற்று இரவு. 11.30 மணியளவில் வீதியோரத்தில் இரருந்தவேளை பேருந்து மோதியதில் சம்பவம் இடம்பெற்றது.சாரதி தப்பியோடியுள்ளார். இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.