SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதனனுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் இன்றைய தினம் திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்தோருக்கு இடையூறுகளை ஏற்படுத்தி தன்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.