சேலம் 8 வழிச்சாலை போன்ற திட்டங்களால்தான் நாடு முன்னேறும் - ரஜினி கருத்து.!

ஆசிரியர் - Editor II
சேலம் 8 வழிச்சாலை போன்ற திட்டங்களால்தான் நாடு முன்னேறும் - ரஜினி கருத்து.!

பத்தாயிரம் கோடி மதிப்பில் சேலம் - சென்னை 8 வழி விரைவு பசுமைவழிச் சாலை அமைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இது சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக திகழ்கிற விளைநிலங்களை பசுமை வழி சாலைகளுக்காக அரசு கையகப்படுத்துவதை அப்பகுதி மக்கள் துளியும் விரும்பவில்லை. தங்கள் வாழ்வாதாரத்தினை சீர்குலைக்கும் முயற்சியகாகவே இதனை அவர்கள் பார்க்கின்றனர்.

அதே சமயம், சாலைகள் அமைப்பதற்காக பொதுமக்களின் வீடுகள் மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த அளவெடுத்து வருகிறது அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களும், பொதுமக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்ற சமூக ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இந்த சமயத்தில் மக்களுக்கு ஆதரவாக நின்று செயலாற்ற வேண்டிய எதிர்க்கட்சியான உள்ளிட்ட திமுக உள்ளிட்டவை அமைதி காப்பது அதிகப்படியான அதிர்ச்சியினை அளிக்க கூடிய சூழலில், சேலம் 8 வழிச்சாலை போன்ற திட்டங்களாலேயே நாடு முன்னேறும் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் ரஜினி.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு