நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு என்ன நன்மை?

ஆசிரியர் - Editor II
நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு என்ன நன்மை?

தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ நோக்கு கூடத்தால் கதிர்வீச்சு ஏற்படாது என்றும், அந்த கூடத்தில் பூமியைத் துளைத்து ஆய்வு நடைபெறாது என்றும் நியூட்ரினோ திட்டத்தின் இயக்குநரான வி.எம். தத்தார் தெரிவித்துள்ளார்.

பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலையின் கீழ்தான் ஆய்வு நடைபெறும் என்றும், பூமிக்கு அடியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படவில்லை என்றும், நியூட்ரினோ துகள்களை பிரித்து எடுக்க சுரங்கத்தில் 50 ஆயிரம் டன் மின்காந்தம் வைக்கப்படும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் குறித்த நிலவும் அச்சம்தான், இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எழுந்துவரும் எதிர்ப்புகளுக்கு காரணம் என்று கருதிய அதிகாரிகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதன் தொடக்கமாக, நியூட்ரினோ திட்ட இயக்குநர் வி.எம். தத்தார் மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விஞ்ஞாயான் பிரசார் நிறுவனத்தைச் சேர்ந்த த.வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நியூட்ரினோ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஊடகத்தினரிடம் விளக்கமாக பேசினர்.

தேனியில் அமையவுள்ள ஆய்வு மையத்தில், வளி மண்டலத்தில் காஸ்மிக் துகள்களுடன் கலந்துவரும் நியூட்ரினோ துகள்களை கண்டறிவதற்காக ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

''நியூட்ரினோ கருவியின் முதல்கட்ட பணி வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. தேனி நியூட்ரினோ மையத்தில் வைக்கப்படும் முக்கிய கருவியான ஐயன் கலோரிமீட்டரின் பண்புகளைக் கொண்ட சிறிய ஐயன் கலோரிமீட்டர் கருவி மதுரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது'' என்றும் அவர் கூறினர்.

வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் நியூட்ரினோ நோக்குக்கூடத்தின் முக்கிய பணி என்று கூறிய அறிவியலாளர்கள், இந்த ஆய்வுகளுக்கான கருவிகள் எதுவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு