யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து தாக்குதல்...

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வவுனியாவில் இருவர் வழிமறித்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த சாரதி பயணிகளுடன் பேருந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டினை தொடர்ந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், தனியார் பேருந்து பணியாளர்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் , அவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு