திடீர் சுகயீனத்தால் சிசு மரணம்..

ஆசிரியர் - Editor I
திடீர் சுகயீனத்தால் சிசு மரணம்..

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று வெள்ளிக்கிழமை (18)  உயிரிழந்துள்ளது.  

தவசிகுளம் - கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த  குழந்தையே உயிரிழந்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெற்றோர்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். 

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில்  சேர்ப்பிக்கப்பட்டது. 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்று  பரிதாபமாக உயிரிழந்தது. 

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி  மேற்கொண்டார். 

குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு