மனைவியின் அந்தியேட்டி கிரியை அன்று கணவனும் உயிரிழப்பு - யாழில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மனைவியின் அந்தியேட்டி கிரியை அன்று கணவனும் உயிரிழப்பு - யாழில் சம்பவம்..

மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது , கணவனும் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரணவாய் பகுதியில்  திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காரணவாய் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்திருந்தார். அவரின் அந்தியேட்டி கிரியைகள் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்றது.

அதன் போது, உயிரிழந்த பெண்ணின் கணவனான முத்தன் தர்மலிங்கம் என்பவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு