யாழ்.தாவடியில் வீடுபுகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் வீடுபுகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்.தாவடி பகுதியில் வீடு புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் கடந்த 1ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி போல் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் விபுலானந்தம் அபீஸ் (வயது 22) என்ற இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் 24வது    விடுதியில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதற்கு முன்னரும் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு