பொதுமகனிடம் 5 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய இரு பொலிஸார் பணி நீக்கம்! கிளிநொச்சியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பொதுமகனிடம் 5 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய இரு பொலிஸார் பணி நீக்கம்! கிளிநொச்சியில் சம்பவம்..

கிளிநொச்சியில் பொதுமகனிடம் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் செவ்வாய்க்கிழமை (03) மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு இருவரையும் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.

குறித்த பொதுமகனிடமிருந்து 5,000 ரூபா பணம் பெற இருவரும் முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், 

குறித்த இருவரையும் நேற்று முதல் பணியிலிருந்து இடைநிறுத்துமாறும் பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இருவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு