யாழ்.மாதகலில் படகு கவிழ்ந்து விபத்து, கடற்றொழிலாளி ஒருவர் மாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலில் படகு கவிழ்ந்து விபத்து, கடற்றொழிலாளி ஒருவர் மாயம்..

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் படகு விபத்துக்கு உள்ளானதில் , கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

காணாமல் போன கடற்தொழிலாளியை , சக கடற்தொழிலாளர்கள் , கடற்படையினர் கடலில் தேடி வருகின்றனர். மாதகல் பகுதியை சேர்ந்த ஒரு கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலுக்காக படகொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று இருந்தனர். 

அந்நிலையில் கடலில் படகு கவிழ்ந்து மூழ்கிய நிலையில் ஒருவர் கரையை நோக்கி நீந்தி வந்தவேளை , சக கடற்தொழிலாளர்கள் கண்டு , அவரை மீட்டு கரை சேர்ந்தனர் மற்றையவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு