ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி

ஆசிரியர் - Admin
ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நாம் சஜித் பிரேமதாசவையே ஆதரித்திருந்தோம். அன்று தொடக்கம் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியும் இணைந்து பயணிக்கிறது. உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாக நாம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் முன்வைத்துள்ளோம். 

பாட்டாளி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட வேண்டும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்கு எம்மிடம் அரசியல் அதிகாரங்கள் காணப்பட்டாலே அவற்றை நாம் மேம்படுத்த முடியும். அதனால் பாட்டாளி மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் தேவை என பிரதானமாக கோரியுள்ளோம். 

எமது கோரிக்கைகளை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் எமது ஆதரவை நாம் அவருக்கு வெளிப்படையாக தெரிவித்துள்ளோம். இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியும்  சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்கள். அதனை நாம் வரவேற்கிறோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு