நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தான வீதித்தடை! முறைப்பாட்டை தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு..

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தான வீதித்தடை! முறைப்பாட்டை தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு..

நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தான வீதி தடை தொடர்பாக கலந்துரையாட வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் யாழ்.மாநகரசபை ஆணையாளர் ஆகியோரை அழைத்துள்ளது. 

பருத்தித்துறை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாதை தடை தொடர்பான கலந்துரையாடல்மேற்படி யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால்,

பொதுமக்களுக்கு உபிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியபாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைபப்பாடு தொடர்பில் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்துப்பட்டுள்ளது. 

எனவே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 09.08.2024 (வெள்ளிக்கிழமை) மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு 

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு