யாழ்.அராலியில் வீதியில் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்! ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனாவில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலியில் வீதியில் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்! ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனாவில் அனுமதி..

யாழ்ப்பாணம் அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது நேற்று புதன்கிழமை (07) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த, குழுவுக்கும் அவ்விடத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

தாக்குதல்களுக்கு உள்ளாகியவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு