பிணையில் விடுதலையான வைத்தியர் அர்ச்சுனா - கொண்டாடித் தீர்த்த மன்னார் மக்கள்..

ஆசிரியர் - Editor I
பிணையில் விடுதலையான வைத்தியர் அர்ச்சுனா - கொண்டாடித் தீர்த்த மன்னார் மக்கள்..

மன்னார் நீதிவான் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார். 

இந்த நிலையில் மன்றிலிருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேற்றனர். 

பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மன்னார் - தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண்ணின் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியிலிருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் அங்கு கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு