மருத்துவர் அர்ச்சுனா பிணையில் விடுதலை! - நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் - Admin
மருத்துவர் அர்ச்சுனா பிணையில் விடுதலை! - நீதிமன்றம் உத்தரவு

மன்னார் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவர் அர்ச்சுனா இன்று இரு சரீரப் பிணையில் செல்ல மன்னார் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் மன்னார் மருத்துவமனையில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் பெண்ணின் மரணம் தொடர்பாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறி மருத்துவர்  அர்ச்சுனா அத்துமீறி மருத்துவமனை நோயாளர் விடுதிக்குள் நுழைந்து இறப்பு தொட்பான விளக்கத்தைக் கேட்டிருந்தார்.

மேலும், அங்கு முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று மன்னார் நீதிமன்றத்தினால் இரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு