யாழ்ப்பாணத்திலிருந்து டிப்பரில் கஞ்சா கடத்தியவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து டிப்பரில் கஞ்சா கடத்தியவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து சனிக்கிழமை (27) கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தினை சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர். 

அதன்போது, டிப்பர் வாகனத்தினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 20 கிலோ 485 கிராம் கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றினர். 

 அதனையடுத்து டிப்பர் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் மற்றும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக 

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு