யாழ்.மானிப்பாய் - கட்டுடை வீதியில் கோர விபத்து! தாய் உயிரிழப்பு மகள் காயம், நிறைபோதையில் வாகனம் ஓடிய சாரதி தப்பியோட்டம், இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் - கட்டுடை வீதியில் கோர விபத்து! தாய் உயிரிழப்பு மகள் காயம், நிறைபோதையில் வாகனம் ஓடிய சாரதி தப்பியோட்டம், இருவர் கைது..

யாழ்ப்பாணம் மானிப்பாய் - கட்டுடை சந்தியில் வானும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சங்கானையைச் சேர்ந்த முகுந்தன் அஜந்தா என்ற 43 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இருவர் தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியோடியதாகவும் வேறொருவரை பொலிஸார் கைது செய்ததாகவும் அங்கு கூடிய பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு