யாழ்.கொடிகாமத்திலிருந்து யாழ்.நகருக்கு பேருந்தில் வெடிமருந்து கடத்திய நபர் கைது! 1 கிலோ ரீ.என்.ரி வெடிமருந்து மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்திலிருந்து யாழ்.நகருக்கு பேருந்தில் வெடிமருந்து கடத்திய நபர் கைது! 1 கிலோ ரீ.என்.ரி வெடிமருந்து மீட்பு..

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொடிகாமம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , பேருந்தினை மறித்து சோதனையிட்டனர். 

அதன்போது பேருந்திலிருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து , அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு