பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்..

கேகாலை, புலத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் பின்தெனிய பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 40 வயதுடையவர்களாவர்.இது தொடர்பில் தெரியவருவதாவது, புலத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதாக பின்தெனிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பின்தெனிய பொலிஸார் சந்தேக நபர்கள் இருவருடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் அதிகாரிகளையும் அங்கிருந்த பொலிஸ் முச்சக்கரவண்டியையும் மோதி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து, திருடப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் 05 கிராம் 202 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு