யாழில் பொலிஸார் என கூறி பொதுமகனை மிரட்டி 3 லட்சம் கப்பம் பெற்ற இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழில் பொலிஸார் என கூறி பொதுமகனை மிரட்டி 3 லட்சம் கப்பம் பெற்ற இளைஞன் கைது..

யாழ்ப்பாணத்தில் பொதுமகன் ஒருவரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்ச ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தன்னை பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி பொதுமகன் ஒருவரை மிரட்டி

3 இலட்ச ரூபாய் பணத்தினை கப்பமாக பெற்றுள்ளார். பணத்தினை கொடுத்த நபர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு