யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - வேலணை பகுதியில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்..

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச மருத்துவமனை மற்றும் வேலணை பிரதேச சுகாதார மருத்துவர் பணிமனை அமைந்துள்ள வளாகத்திற்கு அருகிலுள்ள தனியார் காணியினுள் மருத்துவமனை வாளாக எல்லையிலிருந்து அண்ணளவாக 10மீற்றர் தூரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

பாவிக்கப்பட்ட ஊசிமருந்து குப்பிகள் மற்றும் மருந்து ஏற்ற பயன்படுத்திய ஊசிகள் இப்பகுதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் வேலணை பிரதேசத்திலுள்ள அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வேலணை பிரதேசசபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் நோில் சென்று பார்வையிட்டனர். இவ்விடையம் சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொள்வார்களா அல்லது கண்துடைப்பு நாடகத்தை மேற்கொண்டு மறைக்கப்படுமா ? பொதுமக்கள் வினாவுகின்றனர்.

வேலணை பிரதேச மருத்துவமனையின் வாளாகத்தினுள் பல லட்சம் ரூபாய் செலவில் மருத்துவக்கழிவுகள் தரம் பிரித்து பாதுகாப்பாக வைப்பதற்குரிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் காணிகளுக்கு அருகில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதோடு, 

விளையாட்டு மைதானங்கள், நீர் குட்டைகளிலும் இவ்வாறு மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் கவனதில் எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு