A-9 வீதி கோர விபத்தில் இருவர் பலி!! இருவரின் நிலை கவலைக்கிடம்..!!

ஆசிரியர் - Editor I
A-9 வீதி கோர விபத்தில் இருவர் பலி!! இருவரின் நிலை கவலைக்கிடம்..!!

A-9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தி ல் 2 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 2 பேருடைய நிலை கவலைக்கிடம் என கூறப்படுகிறது.

A-9 வீதியில் புளியங்குளம் பகுதியில் இன்று காலை கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. கொள்கலன் வாகனத்தின் சாரதியான  தொன் உஜித் தேஷாந்த மற்றும் 

கிளிநொச்சி, செல்வநகர் பிரதேசத்தை சேர்ந்த கிங்ஸ்லி அருலைய்யா சரோஜினி தேவி என்ற பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கொள்கலன் மற்றும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வானும் 

ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டமையினால் இந்த விபத்து நிகழந்துள்ளது. இரண்டு வாகனங்களும் அதிக வேகமாக பயணித்துள்ள நிலையில், 

சாரதிகளினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு