கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் முச்சக்கர வண்டியிலிருந்து மீட்பு!

ஆசிரியர் - Editor I
கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் முச்சக்கர வண்டியிலிருந்து மீட்பு!

கொழும்பு - 7, வோர்ட் பிளேஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை ஒரு மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகிலிருந்து சடலத்துடன் காணப்பட்ட முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், 

முச்சக்கரவண்டி மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருடையதென தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து முச்சக்கரவண்டியின் உரிமையாளரிடம் வினவியபோது, முச்சக்கரவண்டியை 33 வயதுடைய தனது மைத்துனருக்கு வாடகைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு