வீதியால் சென்றவர்களை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய போதை ஆசாமிகள்! குழந்தை உட்பட 3 பேர் காயம், கீரிமலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீதியால் சென்றவர்களை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய போதை ஆசாமிகள்! குழந்தை உட்பட 3 பேர் காயம், கீரிமலையில் சம்பவம்..

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குழந்தையொன்றும் இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். 

வீதியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களை பின்னால் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு இளைஞர்கள் மோதி விட்டு, அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இளைஞர்கள் இருவரும் போதையில், நிதானமின்றி மோட்டார் சைக்கிளை விபத்தினை ஏற்படுத்தும் விதமாகவும் , வீதியில் பயணித்தோருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும் ஓட்டிச் சென்றதாகவும், 

அவ்வாறு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தே , முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விட்டுத் தப்பிச் சென்றதாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை இனம் கண்டுள்ளதாகவும், 

விபத்தினை ஏற்படுத்திய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு