அனுராதபுரம் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்!

ஆசிரியர் - Editor I
அனுராதபுரம் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்!

அனுராதபுரம் , ஹொரவப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து , திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் , ஹொரவப்பொத்தானை பகுதியில் வீதியை விட்டு , விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் காயமடைந்த நால்வரையும் மீட்டு , ஹொரவப்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , 

பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு