யாழ்.ஊர்காவற்றுறையில் திருநங்கையை கடத்திய குற்றச்சாட்டில் 3 இளைஞர்களுக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் திருநங்கையை கடத்திய குற்றச்சாட்டில் 3 இளைஞர்களுக்கு விளக்கமறியல்..

யாழ்.ஊர்காவற்றுறையில் திருநங்கை ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பிலிருந்து ஊர்காவற்றுறைக்கு வந்திருந்த திருநங்கை ஒருவர் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் தன்னுடைய இருப்பிடத்திற்கு திரும்பியதாகவும், 

அப்போது வாகனம் ஒன்றில் வந்த 3 பேர் கொண்ட குழு திருங்கையை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஆட்களற்ற இடம் ஒன்றுக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து திருங்கையிடம் ஏன் ஊர்காவற்றுறைக்கு வந்தாய் என அவரை கூட்டிச் சென்றவர்கள் கேட்டதாகவும் அதற்கு ஊர்காவற்றுறையில் உள்ள இளைஞர் ஒருவரை சந்திக்க வந்ததாகவும் திருநங்கை கூறியதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை திருங்கை தன்னை கூட்டிச் சென்றவர்களிடம் வழங்கியதாகவும் அவர்களில் ஒருவர் இளைஞருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோது அவருடைய இலக்கம் ஏற்கனவே இளைஞரிடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனடிப்படையில் பலவந்தமாக தன்னை கூட்டிச் சென்றதாக திருங்கை ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் முறையிட்டதன் அடிப்படையில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு,

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு