பிரித்தானியாவில் பேருந்தில் பயணித்த நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்!

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் பேருந்தில் பயணித்த நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்!

இங்கிலாந்து நகரமொன்றில் பேருந்தில் பயணித்த நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

தெற்கு லண்டனின் Croydonயில் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர், 50 வயது நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். 

கடந்த சூன் 4ஆம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் இருக்கையின் மீது கால்களை வைத்துள்ளார்.     

50 வயது நபர் இளைஞரிடம் கால்களை இருக்கையின் மீது இருந்து எடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த குறித்த இளைஞர் அந்நபரின் காலில் பலமுறை கத்தியால் குத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடினார். பாதிக்கப்பட்ட 50 வயது நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

குறித்த இளைஞர் கிழக்கு குரோய்டன் ரயில் நிலையத்தில் இறங்கி ஓடியது தெரிய வந்தது. அவரது புகைப்படம் வெளியிடப்பட்டதுடன், இதுகுறித்து தகவல் அறிந்த நபர்களை மாநகர காவல்துறை தற்போது அழைத்து வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு