இந்திய மீனவர்களால் கடற்படை வீரர் உயிரிழந்த விவகாரம்! இந்திய உயர்தானிகராலய இராஜதந்திரியை அழைத்த இலங்கை வெளிவிவகார அமைச்சு..

ஆசிரியர் - Editor I
இந்திய மீனவர்களால் கடற்படை வீரர் உயிரிழந்த விவகாரம்! இந்திய உயர்தானிகராலய இராஜதந்திரியை அழைத்த இலங்கை வெளிவிவகார அமைச்சு..

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை வீரர் உயிரிழக்க நேரிட்டமை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலய இராஜதந்திரியொருவரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கரிசனை வெளியிட்டுள்ளது.

தொடர்ச்சியான சட்டவிரோதமான மீன்பிடித்தல் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைள் குறித்தும் இழுவைமடி படகுகள் குறித்தும்; 

இலங்கை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் இந்திய இராஜாதந்திரியிடம் கையளித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இந்திய இராஜதந்திரி இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கரிசனையை வெளியிடுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு இந்த விடயத்தை இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் கொண்டுவந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு